Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

ஹைதராபாத்: நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 156 கற்கள் அகற்றம்

கர்நாடகாவைச் சேர்ந்த 50 வயது ஆசிரியர் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை ஹைதராபாத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஹைதராபாத் ப்ரீத்தி சிறுநீரக மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான 50 வயது நோயாளி பசவராஜ் மடிவாலரின் சிறுநீரகத்தில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 156 கற்களை அகற்றியுள்ளனர்.

image

இது தொடர்பாக பேசிய மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் மற்றும் எம்.டி சந்திர மோகன், “ நோயாளி கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக கற்கள் ஒரு பெரிய கொத்தாக இருப்பது தெரியவந்தது. நோயாளிக்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தக் கற்கள் உருவாகி இருக்கலாம், ஆனால் எந்த அறிகுறியும் இல்லை. அவரது உடல்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகு, பெரிய அறுவை சிகிச்சைக்கு பதிலாக, கற்களைப் பிரித்தெடுக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் எண்டோஸ்கோபி வழியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். திட்டமிடல் மற்றும் முறையான தயாரிப்புடன், மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் கற்கள் முழுமையாக பிரித்தெடுக்கப்பட்டன. நோயாளி இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார், அவரது வழக்கமான தினசரி வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்" என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dU0OTD
via IFTTT

एक टिप्पणी भेजें for "ஹைதராபாத்: நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 156 கற்கள் அகற்றம்"