Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

'எதிரி ஏவுகணைகளை 400 கி.மீ தொலைவிலேயே அழிக்கும்' - 'செக்' வைத்த இந்தியா

ரஷ்யாவிடமிருந்து வாங்கிய S - 400 எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

எதிரி நாடுகளில் இருந்து பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகளை வரும் வழியிலேயே கண்டுபிடித்து சிதறடிக்க S - 400 என்ற அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா இம்மாத தொடக்கத்தில் வாங்கியுள்ளது. அவ்வாறு வாங்கிய S - 400 வான் பாதுகாப்பு சாதனங்களின் முதல் பிரிவை பஞ்சாப் பகுதியில் இந்திய விமானப்படை நிறுத்திவைத்துள்ளது.

பஞ்சாப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனப் பகுதிகளில் இருந்துவரும் ஏவுகணைகளை தடுக்கமுடியும் என விமானப்படை தெரிவித்துள்ளது. 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பே ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் வல்லமை கொண்டவை  S- 400 வான் பாதுகாப்பு சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பதி ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க ரூ.1.5 கோடி - புதிய சேவை அறிமுகம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GZ7L27
via IFTTT

एक टिप्पणी भेजें for "'எதிரி ஏவுகணைகளை 400 கி.மீ தொலைவிலேயே அழிக்கும்' - 'செக்' வைத்த இந்தியா"