Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும்/செல்லும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் முன்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக டெல்லி, மும்பை கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் செயல்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
 
image
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தங்கள் பயணிகளை விமானத்தில் ஏற்றும் முன் கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் ஏறுவதற்கு மறுக்கப்பட மாட்டார்கள், ஆனால் அத்தகைய பயணிகளைக் கண்டறிந்து, பரிசோதனைக்காக விமான நிலையத்தில் உள்ள பதிவு கவுண்டருக்கு அழைத்துச் செல்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு என மத்திய விமானத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dZReOV
via IFTTT

एक टिप्पणी भेजें for "ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்"