Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல் : ஆந்திர - தெற்கு ஒடிசா இடையே நாளை கரையை கடக்கும்

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நேற்று அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருமாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. ஜாவத் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை காலை வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடற்கடை அருகே சென்றடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  

புயல் காரணமாக, இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 5 தேதி மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lyS4Gu
via IFTTT

एक टिप्पणी भेजें for "வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல் : ஆந்திர - தெற்கு ஒடிசா இடையே நாளை கரையை கடக்கும்"