Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் : பாஜகவுடன் கைகோர்த்த கேப்டன் அமரிந்தர் சிங்

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், எதிர்வரும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை கூட்டணி தொடர்பாக அமரிந்தர் சிங் சந்தித்துள்ளார்.

117 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல். இதில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு விரைவில் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3E2TjUT
via IFTTT

एक टिप्पणी भेजें for "பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் : பாஜகவுடன் கைகோர்த்த கேப்டன் அமரிந்தர் சிங்"